சிங்கப்பூரில் $30 மில்லியன் மதிப்பிலான புதிய செயற்கை நுண்ணறிவு நிலையம்
(படம்: Envato Elements)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் 30 மில்லியன் வெள்ளி மதிப்பிலான புதிய செயற்கை நுண்ணறிவு நிலையம் திறக்கப்படவுள்ளது.
கட்டுமானச் சூழல் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க நிலையம் ஆதரவு வழங்கும்.
தேசிய வளர்ச்சி அமைச்சு, சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிலையத்தை நிறுவுகிறது.
நிபுணர்கள் செயற்கை நுண்ணறிவு ஆற்றல்களுக்கு மெருகேற்றவும் கட்டுமானச் சூழல் துறையின் சவால்கள் பற்றி நன்கு புரிந்துகொள்ளவும் நிலையம் உதவும்.