NPS சர்வதேசப் பள்ளியின் 5ஆவது தமிழ்க் கவிதை, கதை எழுதும் பயிலரங்கு
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரிலுள்ள NPS சர்வதேசப் பள்ளியில் ஆண்டுதோறும் இடம்பெறும் தமிழ்க் கவிதை, கதை எழுதும் பயிலரங்கு இன்று நடந்தேறியது.
தமிழ்மொழியைப் பயன்படுத்துவதில் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க முனையும் அந்தப் பயிலரங்கு ஐந்தாம் ஆண்டாக இடம்பெறுகிறது.
பயிலரங்கில் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறுபவற்றைப் பற்றிச் சிந்தித்துச் சமூகத்துக்குச் சிறந்தப் பண்புகளை எடுத்துக்கூறும் கவிதைகளையும் கதைகளையும் எழுத மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.
உள்ளூர், வெளிநாட்டு மாணவர்கள் கலந்துரையாடு்வதற்கும் பயிலரங்கு வழிவகுத்தது.