$500 மில்லியன் நிதி ஆதரவு - 13,000 பேருக்குப் பயன்
(படம்: NTUC)
This audio is generated by an AI tool.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த அதிகமான மூத்தோரும் சிறு பிள்ளைகளும் ஆதரவைப் பெறவிருக்கின்றனர்.
அதற்கான புதிய நிதியைத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே உள்ள இரண்டு திட்டங்களை ஒன்றிணைத்துப் புதிய NTUC சமூக நிதி உருவாக்கப்பட்டது.
அடுத்த ஐந்தாண்டுகளில் 500 மில்லியன் வெள்ளியைக் கொண்டிருப்பது எண்ணம்.
அடுத்த மூவாண்டுகளில் ஆண்டுக்கு 10,000 பிள்ளைகளுக்கு உதவுவது இலக்கு.
தற்போது 7,000 பிள்ளைகள் பயனடைகின்றனர்.
பிள்ளைகள் ஆரம்பகாலக் கல்வியையும் முழுமையான வளர்ச்சியையும் பெற ஆதரவு வழங்கப்படும்.
மூத்தோர் துடிப்பாக இருப்பதற்கும் உதவி வழங்கப்படும்.
மூத்த குடிமக்கள் 3,000 பேருக்கு உதவியை விரிவுபடுத்துவது எண்ணம்.
தற்போது 2,000 பேருக்கு உதவி கிடைக்கிறது.