சிங்கப்பூரில் உணவு-பானக் கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் உணவு-பானக் கடைகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருக்கிறது.
கடந்த பத்தாண்டில் அந்த எண்ணிக்கை 42 விழுக்காடு அதிகரித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
கடைகள் மூடப்படுகின்றன. ஆனால் அதைவிட அதிகமான உணவு-பானக் கடைகள் திறக்கப்படுகின்றன என்று வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.
அவற்றில் எத்தனை உள்ளூர்க் கடைகள், எத்தனை வெளிநாட்டுக் கடைகள் என்பதைக் கண்காணிப்பதில்லை என்று அமைச்சு சொன்னது.
உணவு-பானத் துறை கடுமையான போட்டிமிக்கத் துறை.
அதில் உள்ளூர் மரபுடைமையைக் காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.