நீர்நாய்களுக்குக் கருத்தடை?
Reuters
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் சிலப் பகுதிகளில் அதிகரிக்கும் நீர்நாய்களின் எண்ணிக்கையைச் சமாளிக்கக் கருத்தடை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தேசிய பூங்கா கழகம் ஆராய்கிறது.
லெந்தோர் (Lentor), மேபிளவர் (Mayflower), வட்டாரங்களில் நீர்நாய்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்கத் தினசரி சுற்றுக்காவல் நடவடிக்கைகளையும் இவ்வாண்டு கழகம் தொடங்கியிருக்கிறது.
நீர்நாய்கள் வீட்டிற்குள் நுழைந்து, தொட்டிகளில் இருக்கும் மீன்களைச் சாப்பிட்டதாகக் குடியிருப்பாளர்கள் கொடுத்த புகார்களைத் தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
வெவ்வேறு வட்டாரங்களில் நீர்நாய்களின் எண்ணிக்கையை அளவிடும் அதே வேளையில் இந்த முயற்சியில் குடியிருப்பாளர்களையும் இணைக்கும் வழிகளைக் கழகம் ஆராய்கிறது.