சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"மனத்திற்குத் திருப்தி அளிக்கிறது" - பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள்
யீஷூன் புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நடந்துகொண்டிருக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் அவர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.
பால்குடங்களையும் காவடிகளையும் ஏந்திய பக்தர்கள் சிலர் அவர்களது அனுபவத்தைச் 'செய்தி'யுடன் பகிர்ந்தனர்.