Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி பெரிதாகப் பேசுவதில்லை: பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி பெரிதாகப் பேசுவதில்லை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

சிக்கல்களைச் சமாளிப்பது இறுதியில் மக்கள் செயல் கட்சியின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

பத்தாண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட மதிய வேளை பிரசாரக்கூட்டத்தில் மக்கள் செயல் கட்சி (PAP) வேட்பாளர்கள் உரையாற்றினர்.

மக்கள் செயல் கட்சி UOB பிளாஸா ஸ்குவேரில் நடத்திய கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கட்சியின் சார்பில் ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் போட்டியிடும் டேவிட் ஹோ அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

"பலர் நான் தேர்தலில் போட்டியிடத் தகுதியுடையவரா என்று கேள்வி எழுப்பினர். திறமைகளை வளர்த்துக்கொண்டு மேலும் அயராது உழைப்பேன், அனைவருக்கும் சேவையாற்றுவேன்," என்றார் அவர்.

மாறிவரும் உலகில் ஊழியர்கள் பல சவால்களைச் சந்திப்பதாக அல்ஜூனிட் குழுத்தொகுதியில் நிற்கும் ஜகதீஸ்வரன் ராஜூ பகிர்ந்தார்.

பிரசாரத்தில் இறுதியாகப் பேசிய பிரதமர் வோங் "எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பல இடங்களை எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் அவர்கள் கூடுதலான பொறுப்பு வேண்டும் என்று கேட்பதில்லை," என்றார்.

அமெரிக்கா சிங்கப்பூர் மீது விதித்திருக்கும் வரிகளைச் சமாளிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழுவை வழிநடத்தும் துணைப்பிரதமர் கான் கிம் யோங் பற்றியும் அவர் பேசினார்.
 
(படம்: CNA/Wallace Woon)
"திரு கான் எனது வலது கை போன்றவர். சிக்கல்கள் நேர்ந்தால் அவற்றைச் சமாளிக்கக்கூடிய திறன் அவருக்கு உண்டு. அவர் நம்பகமானவர்," என்றார்.

மாறிவரும் உலகைக் கண்டு அஞ்சவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட திரு வோங் மக்கள் செயல் கட்சி, மக்களுடன் இறுதிவரை பயணம் செய்யும் என்று உறுதியளித்தார்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்