Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Perromart புதிய உரிமையாளரிடம் விற்கப்பட்டிருக்கிறது

வாசிப்புநேரம் -
இணையத்தில் வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் பிரபல நிறுவனமான Perromart புதிய உரிமையாளரிடம் விற்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்து மாதத்தில் அந்த நிறுவனத்தைப் பற்றிச் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கத்திடம் இருநூற்றுக்கும் அதிகமான புகார்கள் கொடுக்கப்பட்டன.

கடனைச் சரியான நேரத்தில் திரும்பச்செலுத்த முடியாததால் Perromart நிறுவனம் கடந்த மார்ச் மாதம் நொடிப்புநிலையில் வைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான Perromart, ஜனவரி மாதம் முதல், பணம் தந்த பிறகும் வளர்ப்புப் பிராணி வந்து சேரவில்லை அல்லது தாமதமாக வருகிறது போன்ற புகார்களைப் பெறத் தொடங்கியது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்