Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாள் குப்பையைக் குறைக்க ரசீதுகளின் பயன்பாட்டை நிறுத்தலாமா?

வாசிப்புநேரம் -

ரசீதுகளின் பயன்பாட்டைப் படிப்படியாக நிறுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அத்தகைய திட்டங்கள் தற்போது ஏதுமில்லை என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான ஆய்வுகள் ஏதும் செய்யப்பட்டதில்லை என்று அவர் சொன்னார்.

ரசீதுகளைக் குறைக்க மின்னியல் தளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை அறிமுகம் செய்திருப்பதாக அவர் கூறினார். 

அது செயல்திறனை அதிகரிக்கவும் தாள் குப்பை அளவைக் குறைக்கவும் உதவும் என்றார் அவர்.

InvoiceNow மூலம் மின்ரசீது முறையைப் பயன்படுத்துமாறு நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அமைச்சர் ஃபூ குறிப்பிட்டார்.

ரசீதுகள் வேண்டுமா என்று வாடிக்கையாளர்களைக் கேட்பது, மின்னிலக்க ரசீதுகளை வழங்குவது ஆகிய நடைமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றலாம் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்