பொதுத்தேர்தல் முடிந்ததும் பணிகளை மீண்டும் தொடங்கிவிட்டோம்- பிரதமர் வோங்
வாசிப்புநேரம் -

படம்: YouTube/Lawrence Wong
அனுபவமிக்கத் தலைவர்களுடன் புதிய சிந்தனை கொண்ட இளையர்கள் நாட்டின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்காற்றுவர் என்று சிங்கப்பூரர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதைப் பொதுத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
பொதுத்தேர்தல் முடிவுற்றதும் தமது அணி மீண்டும் மும்முரமாகப் பணியாற்றி வருவது குறித்து காணொளி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரியால் சிங்கப்பூரர்களுக்கும் உள்ளூர் வர்த்தகங்களுக்கும் ஏற்படும் பாதிப்பைச் சமாளிப்பதில் முக்கியக் கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள 5இல் 4 வர்த்தங்களை அமெரிக்காவின் வரிவிதிப்பு பாதிக்கும் என்பதை சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வு தெரிவித்திருப்பதை அவர் சுட்டினார்.
வருமானங்கள் குறையும் என்றும் புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதை 3 மாதங்கள் வரை ஒத்தி வைக்க நேரும் என்று நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் ஆய்வு குறிப்பிட்டது.
துணைப்பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான சிறப்புக்குழுவின் திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் பிரதமர்.
திரு கான் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதையும் அவர் சுட்டினார்.
இதற்கிடையே சிங்கப்பூரர்களுக்கும் வர்த்தங்களுக்கும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார் பிரதமர்.
பொதுத்தேர்தல் முடிவுற்றதும் தமது அணி மீண்டும் மும்முரமாகப் பணியாற்றி வருவது குறித்து காணொளி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரியால் சிங்கப்பூரர்களுக்கும் உள்ளூர் வர்த்தகங்களுக்கும் ஏற்படும் பாதிப்பைச் சமாளிப்பதில் முக்கியக் கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள 5இல் 4 வர்த்தங்களை அமெரிக்காவின் வரிவிதிப்பு பாதிக்கும் என்பதை சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வு தெரிவித்திருப்பதை அவர் சுட்டினார்.
வருமானங்கள் குறையும் என்றும் புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதை 3 மாதங்கள் வரை ஒத்தி வைக்க நேரும் என்று நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் ஆய்வு குறிப்பிட்டது.
துணைப்பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான சிறப்புக்குழுவின் திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் பிரதமர்.
திரு கான் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதையும் அவர் சுட்டினார்.
இதற்கிடையே சிங்கப்பூரர்களுக்கும் வர்த்தங்களுக்கும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார் பிரதமர்.
ஆதாரம் : Others