Skip to main content
மசாலா தேநீரோடு அதிபர் தர்மனின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மசாலா தேநீரோடு அதிபர் தர்மனின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் அனைவருக்கும் தமது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அவர் தமது Facebook பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டார்.

மசாலா தேநீர் என்றால் தமக்கு மிகவும் பிடிக்கும் என்ற சுவைத் தகவலையும் அதிபர் அதில் பகிர்ந்துகொண்டார்.

தீபாவளியைக் கொண்டாடுவோர் முடிந்தால் மசாலா தேநீரை அருந்தி மகிழும்படி அதிபர் கேட்டுக்கொண்டார்.

இஸ்தானாவுக்கும் மசாலா தேநீருக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து அவர் ஓர் இனிய தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

மசாலா தேநீரில் போடப்படும் மூலிகைகளில் ஜாதிக்காயும் (nutmeg) ஒன்று.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜாதிக்காய் மரங்கள் நிறைந்த பகுதியில்தான் தற்போதைய இஸ்தானா அமைந்திருப்பதாக அவர் சொன்னார்.

தற்போது இஸ்தானாவில் அமைந்துள்ள Spice Terraceஇல் ஜாதிக்காய் மரங்களைப் பார்க்கலாம் என்றார் அதிபர் தர்மன்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்