2C கட்டப்பதிவில் கிட்டத்தட்ட பாதித் தொடக்கப்பள்ளிகளில் குவிந்த பதிவுகள்
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதித் தொடக்கப்பள்ளிகளில் 2C கட்டப்பதிவில் இருக்கும் இடங்களைவிடப் பதிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
கல்வி அமைச்சின் தகவலில் அது தெரியவந்தது.
தொடக்கப்பள்ளி மாணவர்களைப் பள்ளிக்கூடங்களில் பதிவதில் 2C கட்டப் பதிவில்தான் போட்டி அதிகம்.
பள்ளியோடு முன்பு தொடர்பு எதுவும் இல்லாத மாணவர்களுக்கான பதிவு அது.
சிங்கப்பூரில் மொத்தமுள்ள 181 தொடக்கப்பள்ளிகளில் 88 பள்ளிகளில் இருக்கும் இடங்களைவிடச் சேரவிரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று அமைச்சின் தகவல் காட்டுகிறது.
ஆக அதிகமான போட்டிக்கு இலக்காகி இருப்பது புக்கிட் பாத்தோக்கில் இருக்கும் Princess Elizabeth தொடக்கப்பள்ளி. அங்கிருக்கும் இடங்களைவிட ஐந்து மடங்கு அதிகமான மாணவர்கள் அதில் சேர விரும்புகின்றனர்.