Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாக்காளர்களின் மதிப்பீட்டுக்குத் தயார்: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

வாசிப்புநேரம் -
வாக்காளர்களின் மதிப்பீட்டுக்குத் தயார்: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

(படம்: Facebook/Progress Singapore Party)

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, அதன் நாடாளுமன்றச் செயல்முறைக்கேற்ப வாக்காளர்கள் தங்களை மதிப்பிடலாம் என்று கூறியிருக்கிறது.

மக்களின் மதிப்பீட்டுக்குத் தயாராய் இருப்பதாக அது கூறியது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு Facebookஇல் கட்சி அதனைத் தெரிவித்தது.

முன்னாள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹேசல் புவாவும் (Hazel Poa), லியோங் மன் வாயும் (Leong Mun Wai) கடந்த ஐந்தாண்டில் எடுத்த முயற்சிகளைக் கட்சி பட்டியலிட்டது.

மன்றத்தில் இருவரும் 700க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்தனர். 8 தனிப்பட்ட உறுப்பினர் தீர்மானங்களை அவர்கள் தாக்கல் செய்தனர்.

அத்துடன் முன்வைக்கப்பட்ட மசோதாக்களின் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட உரைகளை இருவரும் நிகழ்த்தியதாகவும் கட்சி கூறியது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்