Skip to main content
ரேஸ் கோர்ஸ் ரோடு வீட்டில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ரேஸ் கோர்ஸ் ரோடு வீட்டில் தீ - 88 வயது ஆடவர் மரணம்

வாசிப்புநேரம் -
ரேஸ் கோர்ஸ் ரோடு வீட்டில் தீ - 88 வயது ஆடவர் மரணம்

படம்: Facebook/SCDF

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

லிட்டில் இந்தியாவில் ரேஸ் கோர்ஸ் ரோடு (Race Course Road) தீ விபத்தில் காப்பாற்றப்பட்ட ஓர் ஆடவர் மாண்டார்.

அவருக்கு 88 வயது.

நேற்று முன் தினம் (3 ஆகஸ்ட்) மாலை 7 மணியளவில் புளோக் 684இல் உள்ள வீட்டில் தீ மூண்டது.

வீட்டினுள் சிக்கியிருந்த ஆடவர் உள்பட ஐவரைக் காவல்துறையினரும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரும் காப்பாற்றினர்.

சுமார் 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

வீட்டிலிருந்து காப்பாற்றப்பட்ட 5 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்கள் 55 வயதுக்கும் 88 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

88 வயது ஆடவர் மருத்துவமனை செல்வதற்குள் மயங்கிவிட்டதாகக் காவல்துறை கூறியது.

தீ எப்படி ஏற்பட்டது என்பது விசாரிக்கப்படுகிறது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்