Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பல பதின்மவயதுப் பெண்களிடம் இனிக்கப் பேசி ஏமாற்றிப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியவர்

வாசிப்புநேரம் -

லின் ரோங்சிங் என்ற 34 வயது ஆடவர் குறைந்தது 20 இளம்பெண்களை இணையத்தில் ஏமாற்றி அவர்களைப் பாலியல் வன்முறைக்கோ மிரட்டலுக்கோ உட்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 

அந்த ஆடவர் திருமணமானவர். ஒரு பிள்ளைக்குத் தந்தை. 

இணையத்தில் ஓர் இளம் ஆடவரின் படத்தைப் பயன்படுத்தி, அவரைப் போல நடித்து பதின்மவயதுப் பெண்களிடம் பேசினார் லின். 

அவர் இருவேறு நபர்களைப் போல் அவர்களிடம் நடித்தார். அவரின் ஒரு வேடத்தில், இனிக்கப் பேசி அவர்களைத் தங்களது தனிப்பட்ட ஆபாசப் படங்களைத் தரச் செய்தார். 

இன்னொரு வேடத்தில், அவர் அந்தப் படங்களை வெளியிடப் போவதாகச் சொல்லி மிரட்டினார்.

தனக்குப் பணம் தரவேண்டும் அல்லது தன்னுடன் பாலியல் செயல்களில் ஈடுபடவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் லின் கூறினார். 

அவர் சிலரைப் பாலியல் பலாத்காரம் செய்தார். 

பொதுவாக, சீனாவிலிருந்து வந்து இங்குத் தங்கிக் கல்வி பயிலும் 14 முதல் 19 வயது வரையிலான பெண்களை லின் குறிவைத்தார்.

அவருக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும். 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்