Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தேர்தல் முடிவு வருத்தமளிக்கிறது... ஆனால் இது PSPக்கு முடிவல்ல: லியோங் மன் வாய்

வாசிப்புநேரம் -
தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும் வாக்காளர்களின் முடிவை மதிப்பதாகச் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் (Leong Mun Wai) தெரிவித்துள்ளார்.

அது கட்சிக்கு முடிவல்ல என்றும் அவர் கூறினார்.

அது குறித்துத் திரு லியோங் Facebookஇல் பதிவிட்டுள்ளார்.

"இந்தத் தேர்தல் முடிவுகளைச் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் மக்களின் முடிவைப் பணிவுடனும் மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

இம்முறை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எந்த இடமும் கிடைக்கவில்லை.

கடந்த ஐந்தாண்டுகளாகக் கட்சியின் லியோங் மன் வாயும் ஹேசல் புவாவும் (Hazel Poa) தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் (Non-Constituency Member of Parliament - NCMP) சேவையாற்றினர்.

2020ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் (West Coast-Jurong West) குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலில் தோல்வியடைந்தும்கூட எதிர்த்தரப்பு வேட்பாளர்களில் PSPக்கு அதிகமான வாக்குகள் கிடைத்ததால் திரு லியோங் மன் வாயும் திருவாட்டி ஹேசல் புவாவும் நாடாளுமன்றத்தில் தொகுதியில்லா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்