Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

விமான ஓடுபாதையை மேம்படுத்த SATS அறிமுகம் செய்யும் புதிய திட்டங்கள்

வாசிப்புநேரம் -
விமான ஓடுபாதையில் விபத்துகளைத் தடுக்க SATS நிறுவனம் கூடுதல் பயிற்சிக் கருவிகளை உருவாக்கவுள்ளது.

உள்ளூர்ப் பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் ஆகியவற்றுடன் இணைந்து நிறுவனம் அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறது.

வேகமாக மாறிவரும் விமானத்துறையில் ஊழியர்கள் காலத்திற்கேற்ப தங்களை மேம்படுத்திக்கொள்வது நோக்கம்.

2030களில் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் திறக்கப்படும்போது விமானத்துறையில் புதிய மைல்கல்லாக அது இருக்கும்.

அதிநவீன கட்டமைப்புகள் முதல் தடையற்ற பயணங்கள் வரை, விமான நிலையச் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் முனையமாக அது அமையும்.

செயல்திறனை அதிகரிக்க ஆள்பலம் அதிகம் தேவைப்படும் வேலைகளை மின்னிலக்கத் தொழில்நுட்பம் மாற்றி வருகிறது.

அதேவேளை ஊழியர்களுக்குப் பயிற்சிகளையும் தொழில்நுட்பத் திறன்களையும் நிறுவனம் அளித்துவருகிறது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்