Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலக அரங்கில் பெயரெடுக்க சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு வழிகாட்டல்

வாசிப்புநேரம் -

உலக அரங்கில் பெயரெடுக்க உள்ளூர் நிறுவனங்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் சுமார் 20 நிறுவனங்களுக்கு  Scale-up SG திட்டத்தின் மூலம் இவ்வாண்டு ஆலோசகர்கள் வழிகாட்டுவர்.

அந்தத் திட்டம் புதிய பொருள்களை அறிமுகம் செய்யவும் புதிய சந்தைகளில் நுழையவும் நிறுவனங்களுக்கு உதவியிருக்கிறது.


திட்டத்தில் இதுவரை பங்கேற்ற நிறுவனங்களின் சாதனைகளைக் கொண்டாடும் Scale-up Ignite நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) கலந்துகொண்டார்.

சிங்கப்பூரில் இப்போது அதிகமான எண்ணிக்கையில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவதாக அவர் கூறினார்.

ஆனால் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியைத் தக்கவைப்பது ஒரு சவால் என்றார் அவர்.

Scale-up SG அதில் உதவலாம்.

உள்நாட்டில் மற்ற நிறுவனங்களோடு கூட்டுச் சேர்வதும் நல்லது என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்