துவாஸுக்கும் ஜொகூருக்கும் ரயில்பாதை
வாசிப்புநேரம் -
படம்: Ministry of Digital Development and Information
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மலேசியாவின் ஜொகூர் மாநில அரசாங்கம் இஸ்கண்டார் புத்திரி (Iskandar Puteri) நகரைச் சிங்கப்பூரின் துவாஸ் பகுதியுடன் இணைப்பதற்கான இரண்டாம் RTS ரயில் சேவையை அறிமுகப்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
ஜொகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹாஃபிஸ் காஸி (Onn Hafiz Ghazi) நேற்று பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் (Lawrence Wong) சந்தித்தார்.
இருவரின் கலந்துரையாடலின்போது அந்தப் பரிந்துரை உட்பட மேலும் சில திட்டங்கள் குறித்துப் பேசியதாகத் திரு ஒன் ஹாஃபிஸ் Facebookஇல் தெரிவித்தார்.
சந்திப்புக் குறித்துப் பிரதமர் வோங் அவரது Facebook பக்கத்தில் பகிர்ந்த பதிவில் மலேசிய அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் முக்கிய திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஜொகூர் பாருவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் RTS ரயில் சேவை, ஜொகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வட்டாரம் போன்ற திட்டங்கள் இரு நாடுகளுக்குமிடையே உள்ள வர்த்தக உறவை மேம்படுத்தி சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என்றார் பிரதமர் வோங்.
ஜொகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹாஃபிஸ் காஸி (Onn Hafiz Ghazi) நேற்று பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் (Lawrence Wong) சந்தித்தார்.
இருவரின் கலந்துரையாடலின்போது அந்தப் பரிந்துரை உட்பட மேலும் சில திட்டங்கள் குறித்துப் பேசியதாகத் திரு ஒன் ஹாஃபிஸ் Facebookஇல் தெரிவித்தார்.
சந்திப்புக் குறித்துப் பிரதமர் வோங் அவரது Facebook பக்கத்தில் பகிர்ந்த பதிவில் மலேசிய அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் முக்கிய திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஜொகூர் பாருவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் RTS ரயில் சேவை, ஜொகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வட்டாரம் போன்ற திட்டங்கள் இரு நாடுகளுக்குமிடையே உள்ள வர்த்தக உறவை மேம்படுத்தி சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என்றார் பிரதமர் வோங்.
ஆதாரம் : CNA