சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
விறுவிறுப்பாக நடந்தேறிய "செய்திக்காக" போட்டி!
மீடியாகார்ப் நிறுவனத்தின் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த 'செய்திக்காக...' போட்டியின் இறுதிச்சுற்று இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
பல சவால்களைக் கடந்து ரோஹித் முத்துக்குமரன் வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்குச் சுமார் 500 வெள்ளி மதிப்புடைய பரிசுப் பொருள்களும் பற்றுச்சீட்டுகளும் கொடுக்கப்பட்டன.
இறுதிச்சுற்றில் பங்கெடுத்த எஞ்சிய 4 போட்டியாளர்களுக்கும் பரிசுகள் காத்திருந்தன.