பணத்தைச் சிறந்த வழியில் நிர்வகிப்பது எப்படி?- விளக்கும் கருத்தரங்கு
வாழ்க்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவது ஒரு விதத்தில் பணத் தேவை இருந்துகொண்டே இருக்கும்.
அவசரமாகத் தேவைப்படும்போது பணம் இல்லையெனில் சிக்கல்.
அதைத் தவிர்க்க பணத்தைச் சிறந்த வழியில் நிர்வகிப்பது எப்படி என்பதை விளக்கும் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'Money Ideas' எனும் அந்த நிதித் திட்டக் கருத்தரங்கத்திற்கு ஆறாவது முறையாக ஏற்பாடு செய்துள்ளது M.P. செல்வம் அமைப்பு.
இம்மாதம் 24ஆம் தேதி தோ பாயோ வீடமைப்பு வளர்ச்சிக்கழகத் தலைமையகக் கட்டடத்தில் கருத்தரங்கு ஆங்கிலத்தில் நடைபெறவுள்ளது.
அதுபற்றிய விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும் கருத்தரங்கில் பங்கேற்கப் பதிந்துகொள்ளவும் இந்த இணையத்தளத்தை நாடலாம்.
sgmoneyideas.com
பதிவுக் கட்டணம் 10 வெள்ளி.