பருவநிலை மாற்றம் தொடர்பான இரண்டாம் தீர்மானம் தாக்கல்
மக்கள் செயல்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பருவநிலை மாற்றம் தொடர்பான இரண்டாம் தீர்மானத்தைத் தாக்கல் செய்யவிருக்கின்றனர்.
மக்கள் செயல்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பருவநிலை மாற்றம் தொடர்பான இரண்டாம் தீர்மானத்தைத் தாக்கல் செய்யவிருக்கின்றனர்.
2030ஆம் ஆண்டுக்குள் 55,000 புதிய வேலைகளுக்கு, சிங்கப்பூரர்களைப் பயிற்றுவிக்க உதவும் பசுமை வெளிக் கல்விக்கழகத்தை அமைப்பது;
கரிமத்தைக் கூடுதலாகப் பயன்படுத்துவோர் கூடுதல் வரி செலுத்துவது முதலியவை அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூர் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பொருளியலுக்கு மாறுவதில் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் வழிகளை 15க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் முன்வைப்பர்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின், அரசாங்க நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் தாக்கல் செய்த இரண்டாம் தீர்மானம் குறித்து அவர்கள் பேசுவர்.
அரசாங்கம் பசுமை நிதியை மேம்படுத்தி, இன்னும் கூடுதலான பசுமை வேலை வாய்ப்புகளை உருவாக்க, குழு அழைப்பு விடுக்கும்.
நிறுவனங்கள், சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கத்துக்கு அவற்றைப் பொறுப்பேற்கவைப்பது பற்றியும் பேசப்படும்.