சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மேலும் இருவர் மரணம்
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மேலும் இருவர் மாண்டனர்.
சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை 850 ஆனது.
சிங்கப்பூரில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரில் 509 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அவர்களில் 35 பேருக்கு உயிர்வாயு ஆதரவு வழங்கப்படுகிறது.
10 பேருக்குத் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தேசியத் தடுப்பூசித் திட்டம்
தடுப்பூசி பெறத் தகுதிபெற்ற சிங்கப்பூர்வாசிகளில் 91 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மொத்த மக்கள்தொகையில் சுமார் 56 விழுக்காட்டினருக்கு Booster எனும் கூடுதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.