COVID-19 தொற்றால் சிங்கப்பூரில் மேலும் 9 பேர் மரணம் - அனைவரும் 50 வயதைத் தாண்டியவர்கள்
சிங்கப்பூரில் மேலும் 9 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.
சிங்கப்பூரில் மேலும் 9 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.
அவர்கள் 52 வயதுக்கும் 98 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மாண்டோர் அனைவரும் சிங்கப்பூரர்கள்.
அவர்களில் 6 பேர் ஆண்கள், மூவர் பெண்கள்.
அவர்களில் 6 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை; இருவர் ஒரு முறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்; ஒருவர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.
அவர்களில் 8 பேருக்கு ஏற்கனவே பல்வேறு மருத்துவப் பிரச்சனைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஒருவருக்கு மற்ற எந்தவிதமான சுகாதாரப் பிரச்சினைகள் இல்லை என்றும் அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 192க்கு உயர்ந்துள்ளது.