சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 185 பேர் மருத்துவமனையில்
சிங்கப்பூரில் நேற்று COVID-19 நோய்த்தொற்றால் ஒருவர் மாண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிருமித்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை 840ஆக உள்ளது.
தற்போது 185 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- உயிர்வாயு சிகிச்சை பெறுவோர்: 8 பேர்
- தீவிரச் சிகிச்சைப் பிரிவில்: 11 பேர்
சிங்கப்பூர் மக்கள்தொகையில் சுமார் 50 விழுக்காட்டினர் booster எனும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூர்வாசிகளில் தடுப்பூசி போடத் தகுதி பெற்றவர்களில் 91 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.