வரும் ஜூலை மாதம் முதல் economy, premium economy பிரிவுகளில் பயணம் செய்வோருக்கு இலவச Wi-Fi!
வாசிப்புநேரம் -
வரும் ஜூலை மாதம் முதல் economy, premium economy பிரிவுகளில் பயணம் செய்வோருக்கு இலவச Wi-Fi வழங்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (31 மே) தெரிவித்துள்ளது.
அந்த சலுகையைப் பெறப் பயணிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் KrisFlyer உறுப்பினராக இருப்பது அவசியம்.
அதற்கு இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அது கூறியது.
"அனைத்துப் பிரிவுகளிலும் பயணம் செய்வோருக்கு இலவச Wi-Fi வழங்கும் முதல் விமான நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்தான்," என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பேச்சாளர் CNAயிடம் சொன்னார்.
தற்போது Suites, First, Business பிரிவுகளில் பயணம் செய்வோருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் முன்னுரிமைப் பயணிகள் சேவை மன்ற உறுப்பினர்களுக்கும் இலவச Wi-Fi வழங்கப்படுகிறது.
"Wifiஐப் பயன்படுத்திப் பயணிகள் அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பில் இருக்கலாம். சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யலாம். செய்திகளை உடனுக்குடன் படிக்கலாம்," என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பேச்சாளர் தெரிவித்தார்.
அந்த சலுகையைப் பெறப் பயணிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் KrisFlyer உறுப்பினராக இருப்பது அவசியம்.
அதற்கு இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அது கூறியது.
"அனைத்துப் பிரிவுகளிலும் பயணம் செய்வோருக்கு இலவச Wi-Fi வழங்கும் முதல் விமான நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்தான்," என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பேச்சாளர் CNAயிடம் சொன்னார்.
தற்போது Suites, First, Business பிரிவுகளில் பயணம் செய்வோருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் முன்னுரிமைப் பயணிகள் சேவை மன்ற உறுப்பினர்களுக்கும் இலவச Wi-Fi வழங்கப்படுகிறது.
"Wifiஐப் பயன்படுத்திப் பயணிகள் அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பில் இருக்கலாம். சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யலாம். செய்திகளை உடனுக்குடன் படிக்கலாம்," என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆதாரம் : CNA