சிங்கப்பூர் - பெர்த் தனிமைப்படுத்தத் தேவையில்லாத விமானச் சேவைகளை ஒத்திவைக்கிறது SIA
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA), ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தத் தேவையில்லாத விமானச் சேவைகளை ஒத்திவைத்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியா, எல்லைகளைத் திறக்கும் திட்டங்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து பெர்த்துக்குச்(Perth) செல்லும் விமானச் சேவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
அவை அடுத்த மாதம் ஐந்தாம் தேதி தொடங்கவிருந்தன.
மேற்கு ஆஸ்திரேலியாவில் விரைவாகப் பரவிவரும் ஓமக்ரான் நோய்ப்பரவலின்போது எல்லைகளைத் திறப்பது பொறுப்பற்ற செயல் என்று மாநில முதல்வர் மார்க் மெக்கோவன் (Mark McGowan) கூறினார்.
மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 80 விழுக்காட்டை எட்டும்வரை, எல்லைகளைத் திறப்பதில் தாமதம் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.