Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இன்று முதல் Nuvaxovid COVID-19 தடுப்பூசிக்கான பதிவு தொடக்கம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இன்று முதல் Nuvaxovid COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவுசெய்யலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தகுதி பெற்றவர்கள் மட்டுமே அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்குப் பதிவு செய்யமுடியும்.

இம்மாதம் 18ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் 20 மருந்தகங்களில் தொடங்கும்.

Novavax நிறுவனம் தயாரித்துள்ள அந்தத் தடுப்பூசிக்குப் பிப்ரவரி மாதம் சிங்கப்பூரில் இடைக்கால அனுமதி வழங்கப்பட்டது.

முதல் இரண்டு அல்லது booster தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளாதோர் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

எனினும் mRNA தடுப்பூசிகளே அதிகச் செயல்திறன் மிக்கவை என அமைச்சு சொன்னது.

முதல்முறை COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் Nuvaxovid தடுப்பூசியை இரு முறை குறைந்தது 21 நாள்கள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும்.

Booster தடுப்பூசியாக அதைப் போட்டுக்கொள்வோர் கடைசி தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மாதங்களுக்குப் பின்னர் அவ்வாறு செய்யுமாறு அமைச்சு கூறியது.

-CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்