காஸாவுக்கு மனிதாபிமான உதவி - 7ஆவது முறை அனுப்பும் சிங்கப்பூர்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: MINDEF)
காஸாவில் சண்டைநிறுத்த உடன்பாடு நடப்பில் இருக்கும் வேளையில், சிங்கப்பூர் அந்தப் பகுதிக்கு ஏழாவது முறையாக மனிதாபிமான உதவியை அனுப்பவிருக்கிறது.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan) அது குறித்து ஜோர்தானிய வெளியுறவு அமைச்சர் அய்மான் சஃபாடியிடம் (Ayman Safadi) பேசியிருப்பதாகக் கூறினார்.
உதவித்தொகுப்பில் உணவு, அத்தியாவசிய பொருள்கள், மருத்துவப் பொருள்கள் ஆகியவை அடங்கும்.
அவற்றைச் சிங்கப்பூர் ஆகாயப்படையின் Tanker சரக்கு விமானம், சிங்கப்பூரின் ஜோர்தானிய பங்காளிகளிடம் கொண்டு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
வரும் புனித ரமதான் மாதத்தில் Rahmatan Lil Alamin அறநிறுவனம் மற்றொரு நிதித்திரட்டுக்கு ஏற்பாடு செய்யும் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
காஸா நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan) அது குறித்து ஜோர்தானிய வெளியுறவு அமைச்சர் அய்மான் சஃபாடியிடம் (Ayman Safadi) பேசியிருப்பதாகக் கூறினார்.
உதவித்தொகுப்பில் உணவு, அத்தியாவசிய பொருள்கள், மருத்துவப் பொருள்கள் ஆகியவை அடங்கும்.
அவற்றைச் சிங்கப்பூர் ஆகாயப்படையின் Tanker சரக்கு விமானம், சிங்கப்பூரின் ஜோர்தானிய பங்காளிகளிடம் கொண்டு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
வரும் புனித ரமதான் மாதத்தில் Rahmatan Lil Alamin அறநிறுவனம் மற்றொரு நிதித்திரட்டுக்கு ஏற்பாடு செய்யும் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
காஸா நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
ஆதாரம் : CNA