அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம் - சிங்கப்பூர் வரவேற்கிறது
படம்: AHMAD AL-RUBAYE / AFP
This audio is generated by an AI tool.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடப்புக்கு வந்திருக்கும் போர்நிறுத்தத்தை சிங்கப்பூர் வரவேற்றுள்ளது.
எல்லாத் தரப்பும் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துமாறு குடியரசு கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அதனைத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அமைதிப் பேச்சுகளை வழிநடத்தும் பாகிஸ்தானின் முயற்சிகளையும் அமைச்சு பாராட்டியது.
போர்நிறுத்த உடன்பாட்டைப் பின்பற்றுமாறும், போரில் ஈடுபடாத நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறும் அமைச்சு அனைத்துத் தரப்புகளையும் கேட்டுக்கொண்டது.