சிங்கப்பூரர்களின் செலவு அதிகரித்தது, சேமிப்பு குறைந்தது: புள்ளிவிவரத்துறை
சிங்கப்பூரர்கள் இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் அதிகம் செலவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வரிக்கழிவுகள் போக எஞ்சியதில் செலவிட்ட தொகை சுமார் 10 விழுக்காடு அதிகரித்தது. புள்ளிவிவரத்துறை அந்தத் தகவலை வெளியிட்டது.
சம்பளங்கள் கூடியதும், பணவீக்கத்தைச் சமாளிக்க அரசாங்கம் சிங்கப்பூரர்களுக்குக் கொடுத்த 100 வெள்ளியும் அதற்கு முக்கியக் காரணங்கள்.
மக்கள், ஓராண்டுக்கு முன்பைவிட 17 விழுக்காடு கூடுதலாய்ச் செலவிட்டனர். அதே நேரம் அவர்கள் சேமித்த தொகை, சுமார் மூன்றே கால் விழுக்காடு குறைந்தது.