சிங்கப்பூரின் ஏப்ரல் மாத COVID-19 சம்பவங்கள் அனைத்தும் ஓமக்ரான் ரகம்
சிங்கப்பூரில் சென்ற மாதம் COVID-19 கிருமித்தொற்றால் நோய்வாய்ப்பட்ட அனைவரும் ஓமக்ரான் ரகக் கிருமியால் பாதிக்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில்...
99 விழுக்காட்டினர்: BA.2, அதிலிருந்து உருமாறிய BA.2.12.1.
ஒரு விழுக்காட்டினர்: BA.1, அதிலிருந்து உருமாறிய ரகங்கள்
கிருமித்தொற்று கண்டறியப்பட்ட வெளிநாட்டினரிடையே 98 விழுக்காட்டினர் BA.2, அதிலிருந்து உருமாறிய BA.2.12.1. ரகங்களால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம் (ஏப்ரல் 2022) 101,480 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
அவர்களில் வெளிநாட்டிலிருந்து வந்த இருவருக்கு BA.4 ரகம் அடையாளம் காணப்பட்டது.
-CNA