சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவருக்குக் கிருமித்தொற்று
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் 18 வயது மாணவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் 18 வயது மாணவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அனைத்து விரிவுரைகளும் பாடங்களும் இன்றிலிருந்து இணையம் வழி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (மே 13)அன்று, மாணவருக்குக் காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டன.
மறுநாள் மருத்துவரைக் காணச் சென்ற அவருக்குக் COVID-19 பரிசோதனை செய்யப்பட்டதாகச் சுகாதார அமைச்சு சொன்னது.
ஊடக, கலை, வடிவமைப்புப் பள்ளியில் பயிலும் மாணவர், கடைசியாக இம்மாதம் 11-ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்றிருந்தார்.
அப்போது, அவரிடம் கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று பலதுறைத் தொழிற்கல்லூரியின் பேச்சாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருக்குத் தனிமைப்படுத்தும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.