"தமிழோடு விளையாடு" போட்டியின் இறுதிச்சுற்று இன்று!
மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்புவிவகாரப் பிரிவு ஆண்டுதோறும் நடத்தும் "தமிழோடு விளையாடு" போட்டியின் இறுதிச்சுற்று இன்று (7 மார்ச்) நடைபெறுகிறது.
அதில் 5 பள்ளிகள் களமிறங்குகின்றன.
அவை:
-இயூ டீ தொடக்கப்பள்ளி (Yew Tee Primary School)
-புக்கிட் வியூ தொடக்கப்பள்ளி (Bukit View Primary School)
-பொங்கோல் கோவ் தொடக்கப்பள்ளி (Punggol Cove Primary School)
-செம்பவாங் தொடக்கப்பள்ளி (Sembawang Primary School)
- வெலர் தொடக்கப்பள்ளி (Valour Primary School)
நிகழ்ச்சி இன்று பிற்பகல் உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடைபெறுகிறது.
மாணவர்களின் தமிழாற்றல், குழுவாகச் செயல்படும் திறன், விவேகமான சிந்தனை போன்றவற்றைப் போட்டி சோதிக்கும்.
அதோடு, தமிழில் தட்டச்சு செய்யும் திறனை வளர்த்துக்கொள்ளவும் போட்டி ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
7ஆம் ஆண்டாக நடத்தப்படும் 'தமிழோடு விளையாடு' போட்டி தமிழ்மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் இடம்பெறுகிறது.