'தமிழோடு விளையாடு' - அரையிறுதிச் சுற்று இன்று!
வாசிப்புநேரம் -
(படம்: இம்ரான்)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழோடு விளையாடு' போட்டியின் அரையிறுதிச் சுற்று இன்று நடைபெறுகிறது.
அதில் 20 பள்ளிகள் பங்கேற்கின்றன. 6 பள்ளிகள் மட்டுமே இறுதிச் சுற்றில் போட்டியிடத் தகுதிபெறும்.
St. Gabriel's உயர்நிலைப் பள்ளியில் அரையிறுதிச் சுற்று நடைபெறுகிறது.
St. Gabriel's உயர்நிலைப் பள்ளியில் அரையிறுதிச் சுற்று நடைபெறுகிறது.
இம்மாதம் 8ஆம் தேதியன்று இடம்பெற்ற முதல் சுற்றில் 73 பள்ளிகள் பங்கெடுத்தன.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் போட்டி நடத்தப்படுகிறது.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் போட்டி நடத்தப்படுகிறது.
தமிழோடு விளையாடு போட்டி மூன்று சுற்றுகளைக் கொண்டது.
இறுதிச்சுற்று அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெறும்.
2017ஆம் ஆண்டில் தொடங்கிய 'தமிழோடு விளையாடு' போட்டியின் 6ஆம் பருவம் இது.
போட்டியில் தொடக்கநிலை 4ஆம், 5ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
மாணவர்கள் பிழையின்றித் தமிழில் எழுத ஊக்குவிக்கவும் அவர்களின் சொல்வளத்தைப் பெருக்கவும் போட்டி நடத்தப்படுகிறது.
தொடர்புடையது:
ஆதாரம் : Mediacorp Seithi