சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சௌத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில்... குடமுழுக்கு விழா இன்று...
சிங்கப்பூரின் ஆகப் பழமையான ஆலயம்...
சௌத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில்...
1973ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் தேசியச் சின்னமாக அது அறிவிக்கப்பட்டது.
குடமுழுக்கு விழாவையொட்டிப் பல்வேறு புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலயத்தின் குடமுழுக்கு விழா இன்று (12 பிப்ரவரி) இனிதே நிறைவுற்றது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெறும் இவ்விழாவைக் காண பக்தர்கள் அதிகாலை 2:30 மணியிலிருந்து திரண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்:
லாரன்ஸ் வோங் - துணைப்பிரதமர், நிதியமைச்சர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த இதர அமைச்சர்கள்:
ஜோசபின் தியோ - தொடர்பு, தகவல் அமைச்சர், இரண்டாம் உள்துறை அமைச்சர்.
S. ஈஸ்வரன் - போக்குவரத்து அமைச்சர், வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்.
விழாவில் என்னென்ன சிறப்பு ஏற்பாடுகள்? கேட்டறிந்தது 'செய்தி'.