முழுவீச்சில் நடைபெறும் Standard Chartered சிங்கப்பூர் நெடுந்தொலைவு ஓட்டம்
Standard Chartered சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டம் நோய்ப்பரவல் சூழலுக்குப் பிறகு மீண்டும் முழுவீச்சில் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு அது இணையத்திலும் நேரடியாகவும் நடத்தப்பட்டது.
இம்முறை 40ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.
அவர்களில் 5ஆயிரம் வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களும் அடங்குவர்.
மரினா பே, ஈஸ்ட் கோஸ்ட் (Marina Bay, East Coast) பூங்கா பகுதிகளில் இந்த வார இறுதியில் பல்வேறு பிரிவுகளில் நெடுந்தொலைவோட்டம் நடைபெறுகிறது.
Standard Chartered சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டத்தின் முக்கிய பிரிவுகளான 42.195 கிலோமீட்டர் ஓட்டமும், 21.1 கிலோமீட்டர் ஓட்டமும் நாளை காலை இடம்பெறும்.