Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மோட்டார்சைக்கிள்களைத் திருடியதாக 3 பதின்மவயதினர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் 3 இளையர்கள் மீது மோட்டார்சைக்கிள்களைத்  திருடியதாகக்  குற்றஞ்சாட்டப்படவுள்ளது. 

அவர்கள், 18 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட ஆடவர்கள்.

நேற்று (19 ஜனவரி) கேன்பெர்ரா வியூ, செம்பவாங் விஸ்டா (Canberra View, Sembawang Vista) ஆகிய வட்டாரங்களிலிருந்த அடுக்குமாடிக் கார் நிறுத்துமிடத்திலிருந்து மோட்டார்சைக்கிள்கள் திருடுபோனதாகக் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.   

கார்களைப் பகிர்ந்துகொள்ளும் சேவை வழங்கும் நிறுவனமொன்றுக்கு அந்த மோட்டார்சைக்கிள்கள் சொந்தமானவை. 

சம்பவம் நடந்த இடங்களில் உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவினர் விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளின் மூலம் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் அடையாளம் தெரியவந்தது. 

புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர். திருடுபோன மோட்டார்சைக்கிள்கள் மீட்கப்பட்டன. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு வரைச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்