Skip to main content
தொண்டூழியர் எண்ணிக்கை 20% உயர்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தொண்டூழியர் எண்ணிக்கை 20% உயர்வு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் தொண்டூழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு (2023) அந்த எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சமூகச் சேவைக்கான தேசிய மன்றம் நடத்திய ஆய்வில் அது தெரியவந்தது.

எனினும், நிறுவனங்கள் தொண்டூழியத் திட்டங்களிலிருந்து வெளியேறும் போக்கு இன்னமும் தொடர்வதாய் ஆய்வு குறிப்பிட்டது.

நீண்ட காலத்துக்கு தொண்டூழியத்தில் ஈடுபட வலுவான தலைமைத்துவம் அவசியம்.

அதோடு அர்த்தமுள்ள தொண்டூழிய வாய்ப்புகள் தேவை என்றும் மன்றம் வலியுறுத்தியது.

ஜூலை மாதம் நடத்திய தொண்டூழிய விழாவில் 100,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

பலர் தொண்டூழியத்தில் ஆர்வம் காட்டினர்.

அடுத்த ஆண்டு புதிய தொண்டூழியர்களைச் சேர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்தப்படும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்