Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சம்பள உயர்வு ஆசிரியர்களுக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் தந்துள்ளது: சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர்

வாசிப்புநேரம் -

கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அறிவித்துள்ள சம்பள உயர்வு வரவேற்கத்தக்கது எனச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார் தெரிவித்துள்ளார்.

கிருமிப்பரவல் சூழலால் சிரமத்திற்கு உள்ளாகி மனச்சோர்வடைந்திருந்த ஆசிரியர்களுக்கு அது உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிப்பதாக அவர் கூறினார்.

வரும் அக்டோபர் மாதத்திலிருந்து ஆசிரியர்களுக்கு 5 முதல் 10 விழுக்காடு சம்பள உயர்வு வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சு நேற்று (16 ஆகஸ்ட்) தெரிவித்திருந்தது.

"கல்வி அமைச்சு ஆசிரியர்களின் பணி மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் கொண்டிருக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்தும் ஒரு அறிவிப்பு அது"

என்று திரு. தனபால் குறிப்பிட்டார்.

அத்தகைய ஆதரவு ஆசிரியர்களுக்குத் தொடர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்