Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா - பக்தர்கள் கூடத் தொடங்கிவிட்டனர்

வாசிப்புநேரம் -
அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் இன்று திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறுகிறது.

காலை 6 மணி அளவிலிருந்து பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கிவிட்டனர்.

திருக்குட நன்னீராட்டு விழாவைப் பற்றிய தகவல்கள் கோயிலில் வழங்கப்படுகின்றன.

தற்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது.

ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டுள்ளனர்.

பக்தர்கள் அனைவருக்கும் பிளாஸ்டிக் உறைகள் (poncho) வழங்கப்படுகின்றன.
அவற்றை அணிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

பக்தர்கள் அமர்வதற்காக 8,000 நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொண்டூழியர்களின் உதவியோடு அனைத்து ஏற்பாடுகளும் சீராக நடைபெறுகின்றன.

பக்தர்கள் விழாவைக் காண்பதற்காகப் பெரிய திரையும் அமைக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணியிலிருந்து அன்னதானம் வழங்கப்படும்.

அதற்காகக் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்