இம்மாத இறுதிவரை தீவெங்கும் இடியுடன் கூடிய மழை – வானிலை ஆய்வகம் முன்னுரைப்பு

படம்: Gaya Chandramohan/CNA
சிங்கப்பூரில் இம்மாத இறுதி வரை இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் அதனை இன்று (16 பிப்ரவரி) தெரிவித்தது.
பெரும்பாலான நாள்களில், பிற்பகல் நேரங்களில், தீவெங்கும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.
சில நாள்களில் அது மாலை வரை நீடிக்கக்கூடும் என்றும் ஆய்வகம் குறிப்பிட்டது.
அன்றாடக் குறைந்தபட்ச வெப்பநிலை, 24 டிகிரி செல்சியஸுக்கும் 33 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும்.
சில நாள்களில், வெப்பநிலை, 34 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும்.