சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
நேரில் பார்க்க முடியாத ஜல்லிக்கட்டு, விவசாயம் - Virtual Reality மூலம் செய்து பார்த்த மாணவர்கள்
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமும் தமிழ்மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழுவும் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் உதவியோடு அதைச் சாத்தியமாக்கியுள்ளன.
பொங்கல் செய்வது, தோரணம் பின்னுவது, பூ கட்டுவது, கோலம் வரைவது எனப் பற்பல நடவடிக்கைகள்...
இத்தகைய கலாசார அனுபவத்தை மாணவர்களுக்கு நேரில் வழங்க முடிந்தாலும் அனைத்து விதமான பாரம்பரிய அனுபவங்களையும் மாணவர்களின் கண்முன் கொண்டுவர முடிவதில்லை.
அந்தக் குறையைத் தீர்க்கவே மெய்நிகர் தொழில்நுட்பத்தைக் கொண்டு கற்றல் வளங்களைத் தயாரித்துள்ளது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்.