Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சென்ற ஆண்டு கூடுதல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வைக் கொடுத்தன

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் ஊழியர்களின் ஒட்டுமொத்தச் சம்பள உயர்வு தொடர்ந்து வலுவாகவே உள்ளது.

பொருளியல் சென்ற ஆண்டு தொடர்ந்து வளர்ச்சி கண்டதால் நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டின.

அதனால், கூடுதல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வைக் கொடுத்தன.

2022இல் அடிப்படைச் சம்பள உயர்வு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத நிலையை எட்டியது.

பணவீக்கம் கூடிய போதும் சம்பளம் தொடர்ந்து உயர்ந்தது. எனினும் 2021ஆம் ஆண்டோடு ஒப்புநோக்க அது மெதுவான வளர்ச்சி.

நிச்சயமற்ற சூழல் தொடரும் சூழலில், நிறுனங்கள் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கொடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படலாம்.

இந்த ஆண்டு சம்பள உயர்வு விகிதம் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்