சிங்கப்பூர் trending
யீசூன் தீயில் கருகிய கார்
This audio is generated by an AI tool.
யீசூனில் அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தில் கார் ஒன்று தீப்பற்றியுள்ளது.
சம்பவம் நேற்றுக் காலை ஸ்டிரிட் 51இல் இருக்கும் புளோக் 512இல் நடந்தது.
வெள்ளை நிறக் கார் ஒன்று தீயில் முற்றிலுமாகக் கருகிபப்போனதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டன.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்தில் யாருக்கும் காயமில்லை.
பாதிக்கப்பட்ட கார் நிறுத்தும் இடம் தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பாக உள்ளதை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் உறுதிப்படுத்தியது.
நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹூய் யிங் அதனை Facebook பக்கத்தில் தெரிவித்தார்.
தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.