3வது முறையாக வெடிக்கக்கூடும் எரிமலை
ச்சில்லியின் Calbuco எரிமலையில் இருந்து புகை எழும்பவே அது 3வது முறையாக வெடிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ச்சில்லி
ச்சில்லியின் Calbuco எரிமலையில் இருந்து புகை எழும்பவே அது 3வது முறையாக வெடிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எரிமலைக்கு அருகில் உள்ள நகரங்களில் வசிக்கும் சுமார் 2000 பேரை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்ற புதன்கிழமை அந்த எரிமலை வெடித்தது. ச்சில்லியில் உள்ள எரிமலைகளில் Calbuco மிகவும் ஆபத்தான ஒன்று என்று கருதப்படுகிறது. அது வெளிப்படுத்திய சாம்பல் மூட்டங்கள் பக்கத்து நாடான Argentina-வையும் பாதித்துள்ளது. அதனால் அது அதன் விமான நிலையங்கள் சிலவற்றை மூடிவேண்டிய நிலை ஏற்பட்டது.