இத்தாலி - போர்ச்சுகல் ஆண்கள் ரக்பி போட்டி - முதல்முறையாக நடுவர்கள் அனைவரும் பெண்கள்...
இத்தாலிக்கும் போர்ச்சுகலுக்கும் இடையே நடைபெற்ற அனைத்துலக ஆண்கள் ரக்பி (rugby) ஆட்டத்தில் ஒரு புதிய மாற்றம்...
முதல்முறையாக ஆட்டத்தின் நடுவர்கள் அனைவரும் பெண்களாக இருந்தனர்.
திடலில் தென்பட்ட இரு நடுவர்கள், தொலைக்காட்சி ஆட்ட அதிகாரி என அனைவரும் பெண்களே...
அத்துடன் Six Nations என்ற 6 நாடுகள் கலந்துகொள்ளும் ரக்பி போட்டியில் முதல்முறையாக ஒரு குழுவிற்குப் பெண் நடுவர் தலைமையேற்றார்.
இத்தாலி அந்தப் பெருமையைப் பெற்றது.
நடுவர்களில் ஒருவரான ஸ்காட்லந்தின் ஹோலி டேவிட்ஸன் (Hollie Davidson) 2017ஆம் ஆண்டில் முதல் பெண் முழுநேர நிபுணத்துவ ரக்பி நடுவராக நியமிக்கப்பட்டார்.
ஆட்டம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்றது.
ஆட்டத்தை 38-31 என்ற புள்ளிக் கணக்கில் இத்தாலி வென்றது.
-AFP