"நமது விளையாட்டாளர்கள் சிரமங்களைக் கடந்து எவ்வாறு கனவுகளை நிறைவேற்றலாம் என்பதைக் காட்டியுள்ளனர்" - பிரதமர் லீ
உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த வீரர்கள் சிரமங்களைக் கடந்து எவ்வாறு கனவுகளை நிறைவேற்றலாம் என்பதைக் காட்டியுள்ளனர்.
பிரதமர் லீ சியென் லூங் Facebook-இல் அதனைப் பதிவிட்டார்.
இந்தோனேசியாவின் சோலோ நகரில் நடைபெறும் அந்த விளையாட்டுகள் இன்று (6 ஆகஸ்ட்) மாலை நிறைவடையும்.
சிங்கப்பூரைப் பிரதிநிதித்த 36 விளையாட்டாளர்கள் 9 விளையாட்டுகளில் போட்டியிட்டனர்.
சிங்கப்பூர் வென்ற பதக்கங்கள்
- மொத்தம் - 28
- தங்கம்- 7
- வெள்ளி - 9
- வெண்கலம் -12
பதக்கங்களை வெல்வதைத் தாண்டி, விளையாட்டாளர்கள் அனைவருக்கும் விலை மதிப்பற்ற அனுபவம் கிடைத்திருப்பதாகத் திரு. லீ சுட்டினார்.
சிங்கப்பூருக்குப் பெருமை தேடித் தந்ததற்காக விளையாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் லீ.