Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து: உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி

வாசிப்புநேரம் -

கத்தாரில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது. 

இன்று ஆஸ்திரேலியா தென்னமெரிக்க நாடான பெருவை பெனால்டி மூலம் வென்றது. 

டோஹா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் 120 நிமிடங்கள் வரை இருதரப்பும் கோல் எதுவும் போடாமல் சமநிலையில் இருந்ததால் ஆட்டம் பெனால்டி மூலம் தீர்மானிக்கப்பட்டது. 

ஐந்துக்கு நான்கு என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. 

உலகக் கிண்ணப் போட்டியில் ஆஸ்திரேலியா D பிரிவில் பிரான்ஸ்,  டென்மார்க், துனிசியா ஆகிய நாடுகளோடு ஆடும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்