Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக வெற்றி - தோனி மீண்டும் திரும்புவாரா?

வாசிப்புநேரம் -
இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் (IPL) போட்டியில் மஹேந்திர சிங் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

அஹமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் அது குஜராத் டைடன்ஸ் அணியுடன் மோதியது.

அதுவே தோனியின் கடைசி ஆட்டமாக இருக்கக்கூடும் என்று நம்பப்பட்டது.

"இதுவே ஓய்வுபெறுவதை அறிவிப்பதற்கான சரியான நேரம். ஆனால் எனக்குக் கிடைத்த அன்பு... இங்கிருந்து விலகிச் செல்வது சுலபமானது. 9 மாதங்களுக்குக் கடுமையாக உழைத்து இன்னோர் இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட எடுக்கும் முடிவு கடினமானது."

என்றார் 41 வயது தோனி.

அது தமது உடல் அளவிலும் எளிதான செயலாக இருக்காது என்று அவர் சொன்னார்.

அவர் அடுத்த IPL போட்டியிலும் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL போட்டியில் 5ஆவது முறையாக வெற்றிபெற்றிருக்கிறது.

10 ஆண்டுகளாக தோனி அணியின் தலைவராக உள்ளார்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்